கல்வி ஆசான் வலைப்பதிவு பக்க வாசகர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு 2021 தின நல்வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் ராம்ஜீ.
javascript snowHtml Codes

Wednesday, April 19, 2017

திடீர் திருமணமும் திருப்பமும்

ஒரு பொண்ணும் ஒரு பையனும் காதலிக்கிறர்கள். அவர்கள் காதல் பெண் வீட்டுக்கு தெரிந்ததும் பெண்ணுக்கு வேறு திருமணம் செய்ய ஏற்பாடு நடக்கிறது.

இதை அறிந்த பெண் யாருக்கும் தெரியாமல் 'இனி உங்கள் முகத்தில் முழிக்க மாட்டேன்' என கடிதம் எழுதி வைத்து விட்டு பையனோடு ஊரை விட்டு ஓடி விடுகிறாள்.

மறுநாள் பெண் வீட்டாரும் பெண்ணை எங்கெங்கோ தேடி அலுத்துப்போய், இனி அந்த பெண் வந்தாலும் ஏற்பதில்லை என முடிவு செய்தனர்.

இப்பதான் கதையில் திருப்பம். முன்று நாள் கழித்து அந்த பெண் தானாக, பையன் இல்லாமல் வருகிறாள். வாசலில் நிறுத்தி அவளை திட்டுகிறார்கள் பெற்றோரும், அண்ணனும்.

அப்பா : "இப்ப எதுக்கு வந்த? உனக்கு என்ன வேணும்?"

அம்மா : "ஊரார் முன்னாடி எங்களை கொன்னுட்டே! இப்ப எங்கடி வந்த?"

அண்ணன் : "ஏன் மறுபடியும் வந்து தொல்லை பண்றே? உனக்கு என்னதான் வேணும். சொல்லித் தொலை?"

மூன்று பேரும் அவளுடைய பதிலுக்காக பரபரப்பாக காத்திருக்கின்றனர்.

அவள் சொன்ன பதிலை கேட்டு அந்த முன்று பேர் மட்டும் அல்ல! இந்த உலகமே அதிர்ந்தது. அந்த பதில் என்ன?

"என்னுடைய நோக்கியா சின்ன பின் சர்ஜர் மறந்து வைச்சிட்டு போயிட்டேன். அதை எடுத்துட்டு போயிடுறேன்மா."

கதை நீதி : நோக்கியா போன் மூன்று நாளுக்கு சார்ஜ் நிற்கும்.

. 😂என்னால முடியல

No comments:

Post a Comment